Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாட்டா காட்டிய ட்ரம்ப்: பாட்ஷாவான பில்கேட்ஸ்: WHO நிலை இதுதான்!!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (10:27 IST)
WHO-வின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் உருவெடுத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களை திரட்டி அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு.   
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதக கூறி அவ்வாரே செய்தார். 
 
இதனைத்தொடர்ந்து சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழக்கமாக வழங்கும் நிதியைவிட கூடுதல் நிதியை வழங்க துவங்கியது. ஆனால் இப்போது யாரும் எதிர்பாரா வகையில் உலக சுகாதார நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது WHO லிருந்து வெளியேறியது அமெரிக்கா. 
 
அமெரிக்கா விலகியதையடுத்து WHO-வின் பெரிய கொடையாளராக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் கேட்ஸ் ஃபவுண்டேசன் உருவெடுத்துள்ளது. ஐநாவின் ஒரு பகுதியான WHO-வில் தனியார் நிறுவனம் ஒன்று செல்வாக்கு மிக்கவராக உருவெடுத்திருப்பது இதுவே முதல் முறை. 
 
ஆனால், WHO-வில் தனியார் நிறுவனத்தின் செல்வாக்கு அதிகரித்திருப்பது உலக சுகாதார நிபுணர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments