Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை: ஆஸ்திரேலியா உத்தரவு!

Advertiesment
புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை: ஆஸ்திரேலியா உத்தரவு!
, செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:03 IST)
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கட்டுத்தீயால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட இடங்களில் கடந்த செப்டம்பர் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதுவரை 9 பேர் கட்டுத்தீயில் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோலா கரடிகள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் காட்டுத்தீ பரவுவதை தடுக்க ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா மற்றும் சில பிராந்தியங்களில் புத்தாண்டுக்கு பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!