Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென உக்ரைன் சென்ற ஏஞ்சலினா ஜோலி! – உக்ரைன் மக்கள் ஆச்சர்யம்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (15:54 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் சென்றுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் அகதிகளாக வெளியேறும் சோகமும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகமையின் தூதரான ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய படையால் தாக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பின்னர் உக்ரைனின் லிவிவ் நகரில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட ஏஞ்சலினா ஜோலி, அங்கு போரால் இழப்பை சந்தித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments