Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் பிடிக்க போனதோ மீனை.. ஆனால் பிடித்ததோ..!? – அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (16:28 IST)
பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க செல்பவர்கள் பல்வேறு அனுபவங்களை பெறுகிறார்கள். ஒரு அமெரிக்கர் மீன்பிடிக்க சென்றிருக்கிறார் அனால அவருக்கு நடந்த அனுபவமே வேறு!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்தவர் சேஸ் மெக்ரே. சில நாட்களுக்கு முன்பு விடுமுறையை கழிக்க லங்ஹாம் நீரோடை பகுதிக்கு சென்றிருக்கிறார். பொழுதுபோக்குவதற்காக மீன் பிடிக்க திட்டமிட்டவர் தூண்டிலை போட்டுவிட்டு மீனுக்காக காத்திருக்கிறார்.

தூண்டிலில் ஏதோ சிக்கி கொண்டதை உணர்ந்த அவர் அதை வேகமாக வெளியே எடுத்திருக்கிறார். தூண்டிலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். பெரிய மீன் ஒன்று சிக்கியிருந்தது. தூண்டிலில் அல்ல ஒரு பாம்பின் வாயில்! அந்த பாம்புதான் தூண்டிலில் சிக்கியிருந்தது.

தூண்டிலில் சிக்கியபிறகும் அந்த பாம்பு கவ்விய மீனை விடாமல் கவ்விக்கொண்டிருந்தது. இதை தனது மொபைலில் படம் பிடித்த மெக்ரே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments