Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் பிடிக்க போனதோ மீனை.. ஆனால் பிடித்ததோ..!? – அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (16:28 IST)
பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க செல்பவர்கள் பல்வேறு அனுபவங்களை பெறுகிறார்கள். ஒரு அமெரிக்கர் மீன்பிடிக்க சென்றிருக்கிறார் அனால அவருக்கு நடந்த அனுபவமே வேறு!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்தவர் சேஸ் மெக்ரே. சில நாட்களுக்கு முன்பு விடுமுறையை கழிக்க லங்ஹாம் நீரோடை பகுதிக்கு சென்றிருக்கிறார். பொழுதுபோக்குவதற்காக மீன் பிடிக்க திட்டமிட்டவர் தூண்டிலை போட்டுவிட்டு மீனுக்காக காத்திருக்கிறார்.

தூண்டிலில் ஏதோ சிக்கி கொண்டதை உணர்ந்த அவர் அதை வேகமாக வெளியே எடுத்திருக்கிறார். தூண்டிலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். பெரிய மீன் ஒன்று சிக்கியிருந்தது. தூண்டிலில் அல்ல ஒரு பாம்பின் வாயில்! அந்த பாம்புதான் தூண்டிலில் சிக்கியிருந்தது.

தூண்டிலில் சிக்கியபிறகும் அந்த பாம்பு கவ்விய மீனை விடாமல் கவ்விக்கொண்டிருந்தது. இதை தனது மொபைலில் படம் பிடித்த மெக்ரே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments