சிறை கைதிகளையும் விட்டு வைக்காத கொரோனா? – குழப்பத்தில் அதிகாரிகள்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:11 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பினால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள சிறை கைதிகளையும் கொரோனா தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் வீரியமாக பரவி வரும் கொரோனாவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கொரோனா பாதிப்பால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லம்போக் சிறைச்சாலையில் உள்ள 792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெர்மின்சல் தீவில் உள்ள மத்திய சிறைச்சாலையிலும் 644 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சிறைகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாமல் 11 சிறை அதிகாரிகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments