Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை!
, திங்கள், 13 டிசம்பர் 2021 (10:35 IST)
கடந்த சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான விவகாரம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலின் அடிப்படையில் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன 
 
உக்ரைன் நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டுமென்று அதன் எல்லை பகுதியான பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தின் முதல் நாளிலேயே உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நம்பிக்கை