Publish Date: Thu, 22 Mar 2018 (14:04 IST)
Updated Date: Thu, 22 Mar 2018 (14:08 IST)
உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத பிதமாக கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உகாண்டாவின் Entebee விமான நிலையத்தில் இருந்து EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக கீயே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது. உடனடியாக பருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த உதவிகள் தரப்படும் என்று விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.