Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கன் நிலவரம் .... அமெரிக்க அதிபர் இன்றிரவு உரை !

ஆப்கன் நிலவரம் .... அமெரிக்க அதிபர் இன்றிரவு உரை !
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (23:06 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றதால் அந்நாட்டின் காபூல் உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதிகளை தாலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அதிபர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிப்பதாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம் ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை  மற்ற நாடுகள் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானில் உள்ளா பல்வேறு நாட்டு மக்கள் தமது சொந்த நாடுகளுக்குச் செல்ல  விமானப் போக்குவரத்துகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இன்றிரவு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உரையாற்றுகிறார். அவரது உரை குறித்து  உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வருக்கு கோயில் கட்டிய எம்.எல்.ஏ