Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆயிரம் தலீபான்களை விடுதலை செய்தது தவறு! – ஆப்கானிஸ்தான் அதிபர் வேதனை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (13:04 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்களை விடுதலை செய்தது தவறு என அந்நாட்டு அதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக தலீபான்களுக்கு எதிராக ஆப்கன் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த அமெரிக்கா தனது படைகளை முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெற்றுள்ளது. இதனால் தலீபான்கள் அரசு ஆதிக்கத்திலிருந்த பகுதிகளை தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பக்ரீத் விழாவுக்காக மக்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி “தலீபான்கள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை நம்பி 5 ஆயிடம் தலீபான்களை விடுதலை செய்தது தவறாகிவிட்டது. அதனால்தான் இந்த அளவில் இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இன்றுவரை அவர்கள் அர்த்தமுள்ள எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments