Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னை போட்டு தள்ள ஒரு ஏவுகணை போதும்! – போரிஸ் ஜான்சனை மிரட்டிய ரஷ்ய அதிபர்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (11:58 IST)
ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏவுகணை வீசி கொன்றுவிடுவதாக மிரட்டியதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு தேவையான பொருளாதார, ஆயுத உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. ஆனால் ரஷ்யா போர் தொடங்கும் முன்னரே அதுகுறித்த பரபரப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது பிபிசி செய்தி நிறுவனம் போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவிய அமைதியற்ற சூழல் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இதற்காக அப்போது பிரிட்டனின் அதிபராக இருந்த போரிஸ் ஜான்சனிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், புதின் தன்னை காயப்படுத்த விரும்பவில்லை என்றும், தன்னை அழிக்க ஒரு ஏவுகணை போதும் என்றும் மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போரின்போதும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கும் ரஷ்யா மறைமுகமான எச்சரிக்கைகளை அடிக்கடி வெளியிட்டே வந்தது. இந்நிலையில் பிபிசி தயாரித்து வரும் இந்த ஆவணப்படத்தால் புதின் குறித்த பல ரகசியங்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments