Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. அதிமுக வேட்பாளர் யார்?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (11:49 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி பிப்ரவரி 7ஆம் தேதி என்றும் வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி எட்டாம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் வேட்புமனு  தாக்கல் தொடங்கிய நிலையில் திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆனால் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி மற்றும் பாஜக வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி இன்று வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments