Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபர் அதிரடி கைது

வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபர் அதிரடி கைது
, வியாழன், 25 அக்டோபர் 2018 (08:13 IST)
பாரீஸில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
பிரான்ஸில் நபர் ஒருவர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வந்துள்ளார். அந்த சிங்கக்குட்டி பிறந்து 6 வாரங்களே ஆகிறது. அந்த நபர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வருவதையறிந்த பக்கத்து வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மீட்புத் துறையினர் உதவியோடு அந்த சிஙக்குட்டியை மீட்டனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் அந்த சிங்கக்குட்டியை 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சித்தது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். மேலும் அந்த சிங்கக்குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன நடக்க வாய்ப்பு