Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் தீயில் எரிந்த வீடு....வீட்டு உரிமையாளரை காப்பாற்றிய நாய்கள்

Webdunia
திங்கள், 22 மே 2023 (23:01 IST)
பிரிட்டனில்  நள்ளிரவில் பற்றி எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து வீட்டின் உரிமையாளரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில்  இருக்கும் வீட்டு ஒன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் திடீர் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தீ குபுகுபுவென்று பரவிக் கொண்டிருந்தது, அப்போது, வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர்கள் தீயில் சிக்கும் அபாயம் நேர்ந்தது. உடனே வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய்கள் அங்கும் இங்கும் ஓடின சத்தமாக குரைத்தன.

நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்கள் எழுந்து, வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தாலும் , உடனே தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றனர்.

இதுகுறித்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இவ்விபத்து பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments