Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்லாந்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து...27 பேர் காயம்

Webdunia
வியாழன், 11 மே 2023 (19:26 IST)
பின்லாந்து  நாட்டில் பாலம்  ஒன்று இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்பட 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பின்லாந்து நாட்டின் தலை நகர் ஹெல்சின்சிக்கு வெளியே எஸ்பூ என்ற நகர் உள்ளது. இங்கு மக்கள் நடந்து செல்வதற்காக ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்தது  இதில்,  சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பிய 8 ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது, காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஹெல்சின்கி மருத்துவமனை அதிகாரிகள், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படியான பாதிப்புகள் எதுவுமில்லை என்றும், இடிந்து பாலத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments