Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் சுட்டுக்கொலை

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (09:06 IST)
3 பேரை கத்தியால் குத்திக் கொன்ற பாலஸ்தீன சிறுவனை இஸ்ரேலிய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. பாலஸ்தீனர்கள் அவ்வப்போது இஸ்ரேலியர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
இந்நிலையில்  ரமல்லா என்கிற இடத்தில், 17 வயதுடைய பாலஸ்தீன சிறுவன் ஒருவன் மக்கள் நிறைந்த பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தினான். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இதனையடுத்து அந்த சிறுவனை, இஸ்ரேலிய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்றார். இதனால் எல்லைப்பகுதியில் பாலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீன வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments