Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: தாயும் குழந்தைகளும் நலம் என தகவல்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (20:17 IST)
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: தாயும் குழந்தைகளும் நலம் என தகவல்!
ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பிறப்பதை அவ்வப்போது கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு அமெரிக்க நாடான மாலி என்ற நாட்டில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. 25 வயதான அவருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்து உள்ளன என்பதும் தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் மாலி நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்
 
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 9 குழந்தைகள் பிறந்தது மருத்துவ உலகின் மிகப்பெரிய ஆச்சரியம் என்றும் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்து உள்ளதால் அனைவரும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குழந்தையின் எடை 500 கிராம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மருத்துவ உலகில் இதுவரை ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்து அனைத்து குழந்தைகளும் உயிரோடு இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments