Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவுகளில் குடியேறினால் ரூ.71லட்சம் பரிசு – அரசு அறிவிப்பு

Ireland
, செவ்வாய், 20 ஜூன் 2023 (14:48 IST)
அயர்லாந்து  நாட்டு அரசு மக்கள் தொகை குறைவாக இருக்கும் தீவுகளுக்குக் குடியேற வெளிநாட்டவர்களை அழைத்துள்ளது.

பொதுவாக தாங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இதைத்தாண்டு ஒரு நாடு அல்லது ஒரு புதிய தீவிற்கு செல்வதும் அங்கு குடியேறும் ஆசை ஒவ்வொருவருக்கும்  இருக்கும்.

இப்படி தீவுகளில் குடியேற ஆசையுள்ளவர்களுக்கு  ஒரு நல்ல ஆஃபரை கொடுத்துள்ளது அயர்லாந்து நாட்டு அரசு.

அதன்படி, அயர்லாந்து  நாட்டு அரசு மக்கள் தொகை 100 க்கும் குறைவாக உள்ள தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு,  அவர் லிவிங் ஐலேண்ட் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின்படி, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதோடு 80 ஆயிரம் யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.72 லட்சம்) வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத்திட்டத்தின்படி அரசு சில வகுத்துள்ள சில விதிமுறைகள் தான் சிலருக்கு பொருந்துவதாகவும், சிலருக்குப் பொருந்தாதாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் கடவுள் எனக் கூறி நாடகமாடிய போலி சாமியார் கைது