Webdunia - Bharat's app for daily news and videos

Install App

66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் திருட்டு: ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (05:56 IST)
தற்போது உலகில் பிட்காயின் குறித்த ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹேக்கர்களால் எளிதில் பிட்காயினை திருடி விற்கும் சம்பவம் ஒன்று ஜப்பானில் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிட்காயின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது

ஜப்பான் நாட்டில் காயின்செக் என்ற நிறுவனம் பொதுமக்களுக்கு பிட்காயின்களை வாங்கி தருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்குள் புகுந்த ஹேக்கர்கள் 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயினை திருடிவிட்டதாக அறியப்படுகிறது. இதனால் அந்த நிறுவனமே மேலும் இயங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருப்பினும் பிட்காயின் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று பிட்காயின்கள் தரப்படும் என்று காயின்செக் தலைமை அதிகாரி யுசுக்கே தெரிவித்துள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தாலும் சைபர் தாக்குதலால் தங்களது பிட்காயினுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments