Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை கிண்டலடித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை - அரசின் அதிரடி ஆணை

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:36 IST)
சவுதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் அரசை விமர்சித்து சமூக அமைதியை சீர்கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சவிதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சமூக சீர் திர்த்தங்களை கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் இவர் விதித்திருக்கும் பல தடைகளால் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் அரசை கேலி, கிண்டல்கள் செய்து அதன் மூலம் பொது அமைதி, மத உணர்வுகளுக்கு இடையூறு செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் 3 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments