Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மனியில் 4வது அலை - மீண்டும் WFH!!

ஜெர்மனியில் 4வது அலை - மீண்டும் WFH!!
, திங்கள், 15 நவம்பர் 2021 (12:33 IST)
4வது அலை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை தொடங்க ஜெர்மனி அரசு முடிவு. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25.40 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
ஜெர்மனியில் 67% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது அந்த நாட்டு அரசை கவலைக்கொள்ள செய்துள்ளது. இப்போது அங்கு 4வது அலை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை தொடங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. 
 
இதற்காக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட இருக்கிறது. கடந்த மாதம் மத்தியில் இருந்து 4வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. 4வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் உறுப்பு தானம் பெற ஆதார் அவசியம்! – தமிழக அரசு புதிய உத்தரவு!