Publish Date: Wed, 20 Sep 2017 (20:28 IST)
Updated Date: Wed, 20 Sep 2017 (21:47 IST)
அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 149 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது 248 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிகநடுக்கம் ஏற்பட்டது.
இது 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதே போல் 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 5000 பலியானது குறிப்பிடத்தக்கது.
கட்டிட இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.