Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் கடத்தியதாக குற்றச்சாட்டு: சிறை பிடிக்கப்பட்ட 24 இந்தியர்கள் விடுதலை

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (18:31 IST)
சிரியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு கப்பலில் பெட்ரோலிய எண்ணெய் கடத்தி செல்வதாக குற்றஞ்சாட்டி ஒரு கப்பல் சிறை பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து அரசால் சிறை பிடிக்கப்பட்ட அந்த கப்பலில் இந்தியர்கள் 24 பேரும் உள்பட பலர் இருந்தனர்.
 
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்கள் 24 பேரை விடுவிக்க இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு உத்தரவு பிறப்பித்தது
 
இந்த உத்தரவை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து இந்திய மாலுமிகள் 24 பேரையும் விடுவிக்க இங்கிலாந்து அரசு ஒப்புக்கொண்டது
 
இதனை அடுத்து சற்றுமுன் 24 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் விரைவில் இந்தியாவிற்கு திரும்புவார்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இந்திய அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு 24 இந்தியர்கள் விடுவிக்க காரணமாக இருந்ததை அடுத்து மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments