Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2019 - மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு !

2019 - மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு !
, திங்கள், 7 அக்டோபர் 2019 (15:24 IST)
உலகில் உள்ள 6 முக்கியத்துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு வருடம்தோறும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் என்பவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துதுறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதக நோபல் கமிட்டிக்குழு அறிவித்துள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நோபர் பரிசு அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி, அனீமியா , புற்றுநோய், உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைக்கு 3 விஞ்ஞானிகளின் ஆய்வு  மருத்துவ ஆராய்ச்சிக்கு மிகவும்  உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் செல்கள் ஆகிஸிஜனை எப்படி நுகரும் என்ற  ஆய்வு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக, வில்லியம் ஜி,கேலின், சர் பீட்டர் ரெட்கிளிஃப் , கிரேக்  எல். செமன்ஸ்ஆ ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன அதிபர் தங்கவுள்ள ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்! – போலீஸார் தேடுதல் வேட்டை!