Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்புவா நியூ கினியாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்- 18பேர் பலி

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (10:55 IST)
பப்புவா நியூ கினியாவில் நேற்று  6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 18- பேர் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
பப்புவா நியூ கினியாவில் நேற்று நள்ளிரவு 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் 18-பேர் பலியாகியிருக்கலாம் என  அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், மக்கள் சிலர் வீடுகளை இழந்ததால் தெருக்களில் வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  மேலும், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து பப்புவா நியூ கினியா அரசு இன்னும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. 
 
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments