Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (08:41 IST)
சீனாவில் திடீரென பரவிய கொரோனா வைரஸின் தாக்குதலால் 106 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் பகுதியிலிருந்து பரவிய இந்த வைரஸ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ள நிலையில் நேற்று பலி எண்ணிக்கை 80 ஆக இருந்தது. இன்று வரை 106 ஆக உயர்வடைந்துள்ள பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. வைரஸ் தாக்கியதில் 500க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 51 பேர் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பான், தாய்லாந்து, கொரியா போன்ற மற்ற நாடுகளில் இந்த வைரஸ் பரவிய நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments