Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தேடிய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:17 IST)
இந்தியா தேடிய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது மட்டுமன்றி சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்காவும் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கைது செய்யப்பட்ட ஹபீஸ் சையது மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகள் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தன
 
இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஹபீஸ் சையதுக்கு பயங்கரவாத வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் மட்டுமன்றி இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments