Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கேழ்வரகு கூழ் செய்வது எப்படி...?

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:11 IST)
தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 4 கப்
அரிசி நொய் - 2 கப்
தயிர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும். மறுநாள் மாலை ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும்.

பின்னர் நொய் வெந்ததும், கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும். மறுநாள் காலை காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், சுவை அலாதியான கேழ்வரகு கூழ் தயார். விருப்பப்பட்டால் இதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். கூழுடன் வறுத்த மோர் மிளகாய், துவையல் வகைகள், மாங்காய் காரம், ஊறுகாய் போன்றவை சாப்பிட சிறந்ததாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments