Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவைமிகுந்த பன்னீர் கட்லெட் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பன்னீர் - 100 கிராம் 
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது 
பிரட் தூள் - 1/2 கப் 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
பன்னீரை துருவிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். உருளைக் கிழங்கை  தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
 
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் துருவி வைத்துள்ள பன்னீர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக தட்டி பிரட் தூளில் பிரட்டி  வைக்கவும்.
 
 
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தும் எடுக்கவும். இரு புறமும்  நல்ல பொன்னிறமானதும் எடுத்து விடவும். எல்லா கட்லெட்களையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 12 கட்லெட்கள் வரை வரும்.  சுவையான கட்லெட் தயார். தக்காளி சாஸுடன் பரிமாற சுவை அபாரம். நீங்களும் சமைத்து சுவைத்து பருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments