Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்ப தலைவிகளுக்கான சில பயன்தரும் வீட்டு குறிப்புகள்...!!

குடும்ப தலைவிகளுக்கான சில பயன்தரும் வீட்டு குறிப்புகள்...!!
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும். கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
* நறுக்கிவைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
 
* தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது நேரம் தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
 
* எலுமிச்சம் பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
 
* மழை நீரில் பருப்பு வகலைகளை வேகவைத்தால் ஒரு கொதியில் வெந்துவிடும். ருசியும் அதிகரிக்கும்.
 
* கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
 
* வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
 
* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
 
* எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப்  போகாமலும் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்கும் தயிர்!!