Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டி - புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

Webdunia
சனி, 5 மே 2018 (06:40 IST)
ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாபை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதனால் 175 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இப்போட்டியில்  ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். அதேசமயம் இந்திய அளவில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments