Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி யால் 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் - மத்திய நிதி அமைச்சர் பெருமிதம்

Advertiesment
ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி யால் 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் - மத்திய நிதி அமைச்சர் பெருமிதம்
, புதன், 2 மே 2018 (12:19 IST)
ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது.  ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் சராசரியாக மாதந்தோறும் ரூ. 89,885 கோடி வசூலானது.
 
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும்.
webdunia
ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதாரம் வளர்ச்சியடைவதை காட்டுவதாக  நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகர் விவேக்....