Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.அழகிரியின் பேரணியை முறியடிக்க மு.க.ஸ்டாலின் திட்டமா?

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (09:09 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க.அழகிரியால் திமுகவுக்கு சிக்கல் வரும் என ஏற்கனவே எதிர்பார்த்தபடி, வரும் 28ஆம் தேதி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்படவுள்ள நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப்பேரணியை நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
 
இந்த பேரணியில் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று மு.க.அழகிரி அறிவித்துள்ளதால் திமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் சென்னையில் அழகிரி நடத்தும் பேரணியில் திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்க்ள் யாரும் பங்கேற்கக் கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் அழகிரியின் பேரணியை முறியடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாகவும், இதற்காக ஸ்டாலினே களத்தில் இறங்கி அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments