Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் நள்ளிரவில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையா?

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (21:19 IST)
இந்திய சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சமீபத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு உச்சநீதிமன்றம் கூடி கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த வழக்கை விசாரித்தது. விடிய விடிய நடந்த இந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை என்ற உத்தர்வை பிறப்பித்தது
 
இந்த நிலையில் எடியூரப்பா தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால் எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்குள் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது
 
இந்த நிலையில் கர்நாடகாவில் தற்காலிக சபாநாயகராக போபையா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட்டுள்ளதால் இந்த மனுவை இன்று நள்ளிரவு உச்சநீதிமன்றம் விசாரணை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments