Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா, பாலாஜி ரீஎண்ட்ரீ!

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா, பாலாஜி ரீஎண்ட்ரீ!
, புதன், 26 செப்டம்பர் 2018 (11:19 IST)
பிக்பாஸ் வீடு இப்போது கலகலவென காணப்படுகிறது. இன்னும் நான்கு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிய போகிறது மக்களுக்கு. பிக்பாஸ் வீட்டில் இப்போது இருப்பது ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேர் மட்டுமே.
இவர்களில் ரித்திகா மற்றும் ஐஸ்வர்யா இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரில் ஒருவர் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளராக வருவதற்கு  அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவின் ஆரம்பகால நாட்கள் மற்றும் ஐஸ்வர்யாவின் ஆரம்பகால  நாட்களை ப்ரோமோவில் போட்டு நினைவு கூர்ந்தார்கள்.
 
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் யாஷிகாவும், பாலாஜியும் ரீஎன்ட்ரீ ஆகி சர்ப்ரைஸ் கொடுத்தனர். யாஷிகா உள்ளே வருவதை கண்டு ஆச்சரியம் அடைந்த ஐஸ்வர்யா ஓடிச்சென்று கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார். யாஷிகா தனது இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியதால், வித்தியாசமாக உணர்ந்ததாக தெரிவித்தார். பாலாஜி தனது வீட்டு நாய் தன்னை பார்த்து குரைத்ததாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுத்தோல் போர்த்திய புலிதான் பன்னீர்செல்வம்: தினகரன் தாக்கு