Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 2ம் தேதி அதிமுக உண்ணாவிரதம் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (11:54 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆளும் அதிமுகவை தவிர மற்ற தமிழக அரசியல் கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று செய்தி வெளியானது. 
 
இந்நிலையில், மதுரையில் அதிமுக சார்பில் 12 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓ.பி.எஸ் “ மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிற ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments