இயந்திரத்தில் கோளாறு... வாக்குபதிவு நடக்காத தொகுதிகள் எவை தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:41 IST)
சில தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  
 
தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சில தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  
 
ஆதம்பாக்கம் ஜி.கே.ஷெட்டி பள்ளியில் வாக்கு இயந்திரம் பழுதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்.
 
மதுரை திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. 
 
தியாகராய நகர் தாமஸ் சாலையில் உள்ள மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறால்  வாக்குப் பதிவு நிறுத்தம்.
 
மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள தொகுதியில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்குப்பதிவு துவங்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!

போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் நாளை பிரச்சாரம்!.. ஏற்பாடுகள் தீவிரம்!...

அவர் என்ன எம்.ஜி.ஆரா?.. பி.டி.ஆர்.தானே!.. சுந்தர்.சி சவால்!..

விஜயை இவ்ளோ திட்டியும் வீணாப்போச்சே!.. திமுகவிலிருந்து விலகிய பிடி செல்வகுமார்..

அடுத்த கட்டுரையில்
Show comments