Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வாக்களித்து முடித்த பிரபலங்கள் !!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:21 IST)
வாக்கு பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.
 
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 
 
இதில், வாக்கு பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். இதுவரை, 
 
காரைக்குடி கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.
 
தி.நகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மகள்களுடன் வாக்கை பதிவு செய்தார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். 
 
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
 
நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களித்தார்.
 
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.
 
பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கு பதிவு செய்தார். 
சென்னை தேனாம்பேட்டையில் முக ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். 
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடலூர் மாவட்டத்தில் வாக்கினைப் பதிவு செய்தார்.
 
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்களித்து விட்டு புதுச்சேரி புறப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments