Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: புதிய அறிவிப்புகள் இருக்குமா?
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (07:26 IST)
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற உள்ளதை அடுத்து அதில் புதிய அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் சட்டப்பேரவை உறுப்பினர் அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பாசிட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்க 
 
இந்த நிலையில் இன்று இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை அடுத்து ஆளுநர் உரையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்ப வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10.39 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!