Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாஷின் டாக்சிக் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் கரீனா கபூர்!

யாஷின் டாக்சிக் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் கரீனா கபூர்!

vinoth

, செவ்வாய், 19 மார்ச் 2024 (07:32 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. பல மொழி இயக்குனர்கள் யாஷுக்குக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கரீனா கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை இப்போது கரீனா கபூர் உறுதி செய்துள்ளார். முதல் முதலாக தென்னிந்திய படத்தில் நடிப்பது மகிழ்ச்சியானது எனக் கூறியுள்ளார்.  அந்த படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கிறது என தெரியாவிட்டாலும், அதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மகன் சஞ்சயின் படத்தை நிராகரித்த சிவகார்த்திகேயன்!