Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யாஷ்!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யாஷ்!

vinoth

, செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:36 IST)
நடிகர் யாஷ் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது பிறந்தநாளுக்கு கட் அவுட் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் எதிர்பாராத காரணத்தினால் மின்சாரம் ஷாக் அடித்து பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஒரு பகுதியில் யாஷ் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைக்க அவரது ரசிகர்கள் முயன்றனர். அப்போது கட் அவுட் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் கம்பிகளும் பேனரில் இருந்த இரும்புக் கம்பிகளும் உரசியதில் மின்சாரம் தாக்கி ஹனுமந்த் ஹரிஜன், முரளி நடுவினாமணி மற்றும் நவீன் காஜி என்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து இளைஞர்களின் உடல்கள் அவர்கள் வீடுகளில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் யாஷ்.பின்னர் பேசிய யாஷ் “நடிகர்களுக்காக ரசிகர்கள் தங்கள் உயிரை விடக் கூடாது. பொறுப்புடன் செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர் தின ரிலீஸில் இருந்து பின்வாங்கும் கவினின் ஸ்டார் திரைப்படம்!