Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடன் படம் ரிலீஸாகுமா? அடுத்தடுத்து கிளம்பும் பிரச்சனைகள்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (15:52 IST)
காடன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் கடன் பிரச்சனைகளால் ரிலீஸில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.

தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது. மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்போது சில கடன் பிரச்சனைகள் எழுந்துள்ளதாம். இந்த படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் மதுரை அன்புசெழியனிடம் வாங்கிய கடனை கேட்டு அவரும், தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் தயாரித்த உத்தம வில்லன் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களும் சேர்ந்து பிரச்சனைகளைக் கிளப்பியுள்ளனராம். இதனால் இப்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

பிரபாஸை இயக்குகிறாரா அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments