Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் அந்த படத்துக்கு பின் விஜய்யுடன் இணையவில்லை… காரணம் இதுதானா!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:58 IST)
மின்சாரக் கண்னா படத்துக்குப் பின்னர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் விஜய்யுடன் ஏன் இணையவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

90 களில் தயாரிப்பாளர்களின் இயக்குனர் எனப் பெயர் எடுத்தவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். எவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருந்தாலும் சொன்ன தேதிக்குள் சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் எடுத்துக் கொடுத்து விடுவதில் வல்லவர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ஆஸ்தான இயக்குனராக இருந்த அவர் விஜய்யை வைத்து மின்சாரக் கண்ணா என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கினார்.

அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை. இது குறித்து இருவரும் இணையும் வாய்ப்பு மீண்டும் இரண்டு முறை வந்ததாகவும், ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மீண்டும் இணைந்திருந்தால் அந்த படம் விஜய் கேரியரில் முக்கியமானப் படமாக அமைந்திருக்கும் என சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments