Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து விலகியது ஏன்? அஸ்வின் தரப்பு விளக்கம்!

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து விலகியது ஏன்? அஸ்வின் தரப்பு விளக்கம்!
, புதன், 12 மே 2021 (16:21 IST)
குக் வித் கோமாளி படப்புகழ் அஸ்வின் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அதில் அஸ்வின் மட்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன். அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து அஷ்வின் நீக்கப்பட்டுள்ளாராம். அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவரே அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளது திரைப்படம் இல்லையாம். வெப் சீரிஸாம். இத்தனை வருடங்களாக தாம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த நிலையில் வெப் சீரிஸில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை என சொல்லி விலகி விட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.20,000 கோடி மக்களையும் காக்கவில்லை...நதிகளையும் காக்கவில்லை - கமல் டுவீட்