Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரி கொடுத்த பண மோசடி புகார் – விஷ்ணு விஷால் தந்தை முன்ஜாமீன் மனு!

சூரி கொடுத்த பண மோசடி புகார் – விஷ்ணு விஷால் தந்தை முன்ஜாமீன் மனு!
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (16:15 IST)
நடிகர் சூரி கொடுத்த பணமோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.70 கோடி ஏமாற்றியதாக சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்றுள்ளதாகவும்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தான் ஏற்கனவே அளித்திருந்த நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா படத்தின் விலையை ஒரே அடியாக ஏற்றிய விக்னேஷ் சிவன் – எல்லாம் இந்த படத்தால்தான்!