Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஷ்கினை நான் லண்டனுக்கே அழைத்துச் சென்றிருக்கக் கூடாது… விஷால் கருத்து!

மிஷ்கினை நான் லண்டனுக்கே அழைத்துச் சென்றிருக்கக் கூடாது… விஷால் கருத்து!
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:04 IST)
துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது எனிமி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் விஷால் துப்பறிவாளன் 2 ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார். மேலும் ’துப்பறிவாளன் 2 படத்தை அநாதையாக விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை நான் தத்து எடுத்துக்கொண்டேன். அந்த படத்துக்காக மிஷ்கினை லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. அது என் தவறுதான். இங்கேயே படத்தை முடித்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்தது டாக்டர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!