Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவருக்கு கொரோனா தொற்று - ஷாங்காய் டிஸ்னி லேண்ட் மூடல்

Advertiesment
ஒருவருக்கு கொரோனா தொற்று - ஷாங்காய் டிஸ்னி லேண்ட் மூடல்
, செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:11 IST)
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள டிஸ்னி லேண்டில் வந்து சென்ற பார்வையாளர் ஒருவர், வீடு திரும்பிய பின் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால், ஒட்டுமொத்த டிஸ்னி லேண்ட் அடுத்த சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.


 
திங்கள் மற்றும் செவ்வாய் இருநாட்கள் டிஸ்னி லேண்ட் மூடப்பட்டு, அனைத்து பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
 
சீனா வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. எனவே அதற்குள் தன் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க நம்பிக் கொண்டிருக்கிறது.
 
திங்கட்கிழமை கணக்குப் படி, சீனாவில் 92 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அறிவிப்பு: மாணவர்கள் அதிருப்தி!