Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை! விஷால் எடுக்கும் அடுத்த முடிவு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:01 IST)
விஷால் நடிப்பில் து ப சரவணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷூட்டிங் நடத்த முடியாது என்பதால் ஊரடங்கு இல்லாத ஏதாவது ஒரு மாநிலத்துக்கு சென்று படப்பிடிப்பை நடததலாமா என விஷால் யோசித்து வந்தனர். அதையடுத்து ஐதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த படப்பிடிப்புக்காக அங்கு முகாமிட்டுள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை செய்துகொண்ட பின்னரே படப்பிடிப்பை தொடங்கினராம். அதே போல விரைவில் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் விஷால் முடிவு செய்து அதற்கான வேலையை செய்துவருகின்றாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments