Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தூத்துக்குடியில் விஷால்- ஹரி படத்தின் ஷூட்டிங்!

மீண்டும் தூத்துக்குடியில் விஷால்- ஹரி படத்தின் ஷூட்டிங்!
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:40 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி.

இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக தூத்துக்குடியில் தொடங்கி நடந்தது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விஷால் வந்த நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப் பட்டது. இப்போது மார்க் ஆண்டனி படம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ள நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் ஹரி படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங்குக்கு தயாரான விடாமுயற்சி படக்குழு.. இந்த நாட்டில்தான் முதல்கட்ட ஷூட்டிங்!