Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேஜிஎப் கதைக்களம் நடந்த இடத்தில் விக்ரம்மின் அடுத்த பட ஷூட்!

கேஜிஎப் கதைக்களம் நடந்த இடத்தில் விக்ரம்மின் அடுத்த பட ஷூட்!
, வியாழன், 10 மார்ச் 2022 (10:34 IST)
விக்ரம் நடிப்பில் அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லபடுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் வேலை செய்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக சொல்லபடுகிறது. மேலும் இந்த சுதந்திரத்துக்கு முன்னர் நடக்கும் கதைக்களமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோலார் தங்க வயல்களில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சர்வைவர் ஆக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வனோடு மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?