Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை சென்று திரும்பி வந்த விஜய் சேதுபதி… 30 நாள் ஃபிரீதானாம்!

மும்பை சென்று திரும்பி வந்த விஜய் சேதுபதி… 30 நாள் ஃபிரீதானாம்!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:36 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருந்த பாலிவுட் படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்களில் இந்த படத்தை முடிக்கவுள்ளார் இயக்குனர். 90 நிமிடம் ஓடக்கூடிய த்ரில்லர் படமாக இதை உருவாக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு இண்டர்வெல்லே கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் விஜய் சேதுபதி மும்பை சென்றிருந்தார். ஆனால் படத்தின் நாயகி காத்ரின கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். இதனால் விஜய் சேதுபதி சென்னை திரும்பியுள்ளார். இப்போது அவரிடம் 30 நாட்கள் தேதிகள் உள்ளதாம். அவர் ஏற்கனவே நடித்துவரும் படங்களில் யாராவது படப்பிடிப்புக்கு தயாராக இருந்தால் அவர்களுக்கு கொடுக்க உள்ளாராம் விஜய் சேதுபதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போனில் எடுக்கப்படும் தனுஷ் திரைப்படம்! ஆச்சர்யத்தில் கோலிவுட்!